கள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா ?
நடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன? என்ன சின்னம் எதனையும் அறிவிக்காமல் அவர் பாணியில் இழுத்தடிப்பு செய்து வருகிறார். முதலி இவர் பேச்சைக் கேட்டு உட்சாகமடைந்த இவரது ரசிகர்கள். தற்போதும் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.
எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தமிழக இன்ரர் நெட்டை மட்டுமல்ல. உலகளாவிய ரீதியில் பல சர்சைகளை கிளப்பியுள்ளது. தமிழக பரபரப்பு பத்திரிகையான நக்கீரன் வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமானார். சாமியார் நித்தியானந்தா. இவர் நடிகையோடு கட்டிலில் அலங்கோலமாக இருந்த காட்சிகளை, வீடியோவில் பதிவேற்றிய செய்தியாளர். அதனை வெளியிட்டு நித்தியானந்தாவின் குட்டை உடைத்தார்.தற்போது வெளியாகியுள்ள படத்தில், ரஜனி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் நித்தியானந்தாவிடம் ஆசி பெறுவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது. இது தான் ரஜனி அறிவித்துள்ள ஆண் மீக அரசியலா என்று, பலர் கிண்டலடிக்கிறார்கள். இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை
நன்றி
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment